அசைவம் சாப்பிடுபவர்கள் பற்றி தவறான கருத்து 6ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூ ஹெல்த்வே என்ற தலைப் பில் வெளிவந்த 6ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை பல சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்து மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன. இதில் ஆரோக்கியம், சுகாதாரம், மனோதத்துவம், பாது காப்பு, பாலியல் கல்வி, விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகத்தின் 56ஆவது பக்கத்தில் அசைவ உணவு பற்றி தவறான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றுவர், பொய் பேசுவர், வாக்குறுதிகளை மறப்பர், கெட்ட வார்த்தை பேசு வர், திருடுவர், சண்டை போடுவர், வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பானியர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சைவ உணவுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானி யர்கள் உணவில் மீன் உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி அந்தப் பாடப்புத்தகத்தில் குறிப் பிடவே இல்லை.
இது குறித்து சிபிஎஸ்இ தலை வர் வினித் ஜோஷியிடம் கருத்து கேட்ட போது, 9ஆம் வகுப்புக்கு மேல் உள்ள பாடப் புத்தகங் களைத்தான் சிபிஎஸ்இ பரிந்துரை செய்கிறது. மற்ற வகுப்புக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே தேர்வு செய்கின்றன. பள்ளி பாடப் புத்தகத்தில் என்ன உள்ளது என்பதை பற்றி சிபி எஸ்இ கண்காணிப்பதில்லை என்றார்.
தனியார் நிறுவனங்கள் வெளி யிடும் பாடப்புத்தகங்களில் முரண் பாடான பல தகவல்கள் இடம் பெறுவது பற்றி கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சமர்ப் பித்து வருகின்றனர்.