மகாராஷ்டிர மாநில "எரவாடா" ஜெயிலில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 முஸ்லிம் கைதிகளின் வேதனைகளை விளக்கி "உருது" பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு முஸ்லிம் கைதிக்கும், 3 அடி அகலம் 10 அடி நீல அளவில் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவறையும் அதற்கு உள்ளே தான்.
3 பக்கமும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ள அறையின் வாயிலுக்கு இரும்புக்கதவு உள்ளது.
3 அடி அகலமே உள்ள அந்த தனிமை சிறையில், ஒரு கைதி மற்ற கைதியிடம் பேசிக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு அறையும் இடைவெளி விட்டு தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது, அதில் 24 மணி நேரமும் ஒரு "பல்ப்" எரியவிடப்பட்டுள்ளது.
தனிமையை கழிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு "டிரான்சிஸ்டர் ரேடியோ" கொடுக்கப்பட்டுள்ளது, பாட்டு கேட்கும் பழக்கமில்லாத முஸ்லிம்களுக்கு அதனால் பயனில்லை.
ஒவ்வொரு நாளும் மாலையில் மட்டும், ஒரு மணி நேரம் அறையை விட்டு வெளியேற்றப்படும் அவர்கள், 2 கைகளையும் பின்புறமாக கட்டப்பட்டு, கால்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டு, லேசான நடமாட்டத்துக்கு தனித்தனியாக அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த ஒரு மணி நேரம் மட்டுமே அவர்கள் வெளிக்காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
தொழுகைப் பேணுதலுடைய அவர்கள் அந்த தனிமை அறையிலேயே தொழுது வருகின்றனர்.
இரண்டு பெருநாள் தொழுகைக்காக மட்டும், அரசின் சிலவில் வெளியிலிருந்து இமாம் வரவழைக்கப்பட்டு ஜமாத்தாக? தொழுகை நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, கைதிகள் ஓரணியில் நின்று தொழும் ஜமாஅத் தொழுகை அல்ல,அது.
இமாம் யாரென்றே கைதிகளுக்கு தெரியாத வண்ணம், ஒவ்வொருவரும் - அவரவர் அறைகளில் இருந்தே தொழவேண்டும்.
அந்த அறைகளுக்கு முன்பாக, இமாம் மட்டும் தனியாக நின்றுக்கொண்டு தொழ வைத்துள்ளார்.
அந்த பண்டிகை நாட்களிலும் கூட கைதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து "கைலாகு" செய்யும் வாய்ப்போ - வெளியிலிருந்து வந்த இமாமை முகம் பார்த்து பேசும் வாய்ப்போ இல்லை.
மற்ற கைதிகளுக்கு வேலைகள் கொடுக்கப்படுவது போல், இவர்களுக்கு எந்த வேலைகளும் கொடுக்கப்படுவதில்லை.
என்ன கொடுமை இது? இவர்களுக்கான இந்த தண்டனைகளை குறைத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையிலும், தீர்ப்பின் நகல் வரவில்லை என காரணம் சொல்லும் சிறை அதிகாரிகள், தொடர்ந்து, முஸ்லிம்களை தனிமை சிறைகளிலேயே வாட்டி வதைத்து வருகின்றனர்.
மறுப்பு மீடியா செய்தி : http://www.facebook.com/