புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு காரணம் இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே - BBC

மலேசியா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகள் புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளாக இருந்ததாகவும், பின்னர் அவை இஸ்லாமிய நாடுகளாக மாறியதாகவும். இலங்கையும் அப்படி மாறிவிடும் என்ற அச்சம் தான், முஸ்லிம்களின் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என BBC ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.


http://www.bbc.co.uk/news/world-asia-21840600

முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை பவுத்த தீவிரவாதிகள் செய்து வருகின்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் பெப்பிலியானா என்ற சங்கிலித் தொடர் துணி விற்பனையகத்துக்குள் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் புகுந்து கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து நொறுக்கியது. பின்னர் கடைக்கு அந்த கும்பல் தீ வைத்தது.

நேற்று, பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், பாசிஸ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

நன்றி : மறுப்பு

Back to Home Back to Top tntjmvl