ஜெய்ப்பூரில் கலவரம் : தொழிற்சாலைகளுக்கு தீ வைப்பு; மதரசாவும் எரிப்பு!

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் "சங்கானீர்" என்ற பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நிகழ்த்தப்பட்டு, முஸ்லிம்களுக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட பேக்டரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, வன்முறை கும்பலின் தாக்குதலிலிருந்து பிள்ளைகள் படிக்கும் மதரசாவும் தப்பவில்லை, அரபி பாடசாலை முற்றாக தீக்கிரையானது.

நேற்றுமுன்தினம் (04/04) வியாழனன்று மாலையில் "சங்கானீர்" பகுதியில் "டூ வீலர் பார்க்கிங்" சம்மந்தமாக ஏற்பட்ட சிறு தகராறை ஊதிப்பெரிதாக்கிய விஷமிகள், நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்று கொண்டிருந்தோர் மீதெல்லாம் கடும் தாக்குதலை நடத்தினர்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பேப்பர் பேக்டரிகள் உள்ளிட்ட நிறுவனங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.

வீதியெங்கும் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள், கையில் பெட்ரோல் நிரப்பிய கேன்களுடன் வாகனங்களில் வந்து மிரட்டிய வண்ணமுள்ளனர்.

போலீஸ் தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு இடங்களில் நடந்த மோதல்கள் தொடர்பாக நேற்று மட்டும் ஜெய்பூர் நகரில் 12 எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார்.

Back to Home Back to Top tntjmvl