ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிந்தால் இன்னும் விசேஷம்-மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

“இஸ்லாமியப் பெண்களை போல தமிழ்நாட்டுப் பெண்களும், பர்தா அணிய வேண்டும். அவ்வளவு ஏன், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிந்தால் இன்னும் விசேஷம்” என்று கூறியுள்ளார், மதுரை ஆதீனம்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அளித்த பேட்டியில், “இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார்”

Back to Home Back to Top tntjmvl