
திரையரங்குகளிலும், டி.டி.ஹெச் மூலமாகவும்
விஸ்வரூபம் திரையிடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,
இத்திரைப்படத்தை சென்சார் போர்ட் மீண்டும் தணிக்கைச் செய்யவேண்டும், புனித
திருக்குர்ஆனையும், முஸ்லிம்களையும் மோசமாக சித்தரிக்கும் காட்சிகளை
நீக்கவேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை இக்கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
இதுக்குறித்து கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியது:
“இத்திரைப்படத்தை தற்போதைய சூழலில் பார்க்கும் பொதுமக்கள் தாடி வைத்துள்ள
முஸ்லிம்களை குண்டுகளை வைக்க தயாராகும் தீவிரவாதிகளாக முத்திரைக்
குத்திவிடுவார்கள். திருக்குர்ஆனை தீவிரவாதத்தின் மூலக்காரணமாகவும்,
முஸ்லிம்களை நாகரீகமில்லாதவர்களாகவும், முஸ்லிம் சமுதாயமே
தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில்
இடம்பெற்றுள்ளன.
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்
என்ற நெறிமுறை வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு சென்சார் போர்ட்
இத்திரைப்படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆகையால் முஸ்லிம்களை மோசமாக
சித்தரிக்கும் தற்போதைய சூழலில் இத்திரைப்படத்தை திரையிடுவதை தடைச்
செய்யவேண்டும். தேவர் மகன், விருமாண்டி, ஹே ராம் போன்ற திரைப்படங்களிலும்
கமலஹாசன் பிறரை இழிவுப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் இவ்வாறு
தலைவர்கள் கூறினர்.
திரைப்படத்திற்கு தடை ஏற்படுத்தாவிட்டால்
ஜனநாயகரீதியில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் எதிர்ப்போம் என்று
எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலி கான்
தெரிவித்தார்.
தனது திரைப்படத்தை திரையிட அனுமதிக்காதது
கலாச்சார தீவிரவாதம் என்றும் தேசப்பற்றுள்ள முஸ்லிம்கள் தனது திரைப்படத்தை
விரும்புவார்கள் எனவும் கமலஹாசன் கூறியதை முஸ்லிம் கூட்டமைப்பு வன்மையாக
கண்டித்தது. சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற முஸ்லிம்களின்
தேசப்பற்ற அளப்பதற்கான ஊடகம் அல்ல இத்திரைப்படம் என்று கூட்டமைப்பு கண்டனம்
தெரிவித்தது.
பெண்களை வியாபாரப் பொருளாக்கி
சித்தரிப்பது, மக்களின் உணர்வுகளுக்கு காயம் ஏற்படுத்துவது போன்ற
விவகாரங்களில் சென்சார் போர்ட் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு
அறிவுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்தை தேசம் முழுவதும்
தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இன்று
கூட்டமைப்பின் தலைவர்கள் மனு அளிப்பார்கள். thoothuonline.com/