அப்சல்குரு தூக்கை விமர்சித்து பல இணையத்தளங்களில் ஆவேசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
காஷ்மீர் மாநில மக்களிடையே இந்த இணையத்தள தகவல்கள் வேகமாக பரவின.
இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஒருவாரமாக இணையத்தள சேவையை மத்திய தொலைத்தொடர்புத்துறை நிறுத்தி வைத்திருந்தது. என்றாலும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இணையத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுவதால் அந்த இணையத்தள பக்களங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 73 இணையத்தள பக்கங்கள் தடுக்கப்பட்டன.
இந்த நிலையில் பேஸ்புக் இணையத்தளத்தில் 55 பக்கங்களில் அப்சல்குரு மரணத்தை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. சில இணையத்தளங்களில் அப்சல்குரு மரணத்தை தியாகத்துக்கு ஈடாக போற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இணையத்தள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஒருவாரமாக இணையத்தள சேவையை மத்திய தொலைத்தொடர்புத்துறை நிறுத்தி வைத்திருந்தது. என்றாலும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இணையத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுவதால் அந்த இணையத்தள பக்களங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 73 இணையத்தள பக்கங்கள் தடுக்கப்பட்டன.
இந்த நிலையில் பேஸ்புக் இணையத்தளத்தில் 55 பக்கங்களில் அப்சல்குரு மரணத்தை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. சில இணையத்தளங்களில் அப்சல்குரு மரணத்தை தியாகத்துக்கு ஈடாக போற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இணையத்தள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.