தனியாக நின்ற சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்த இளவரசர்!

பள்ளிச் சிறுமிக்கு பாதுகாப்பாக தெருவோரம் அபுதாபி இளவரசர் இருந்ததால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் ஒரு பள்ளியின் வழியே சென்று கொண்டிருந்தார். அங்கே பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், "ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்?" என கேட்டார். அதற்கு அச்சிறுமி, "எனது தந்தைக்காக காத்திருக்கிறேன் அவர் இன்னும் வரவில்லை", என பதிலளித்துள்ளார்.

அதற்கு இளவரசர், "பரவாயில்லை, நான் என் காரில் உன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். உன் வீடு எங்கிருக்கிறது?" என்று கேட்டுள்ளார். ஆனால் அந்தச்சிறுமியோ, முன்பின் தெரியாத நபர்களிடம் பேசவோ அவர்கள் அழைத்தால் அவர்களுடன் செல்லவோ கூடாது என என் தந்தை தெரிவித்துள்ளார். ஆகவே நான் உங்களுடன் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே ஆச்சரியமுற்ற இளவரசரின் உதவியாளர், "நீ பயப்படவேண்டிய அவசியமில்லை. இவர் அபுதாபியின் இளவரசர்" என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்தச் சிறுமி. "அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளதால் நான் உங்களுடன் வரமாட்டேன்" என்றார். இதைக் கேட்ட இளவரசர் சிரித்துக்கொண்டே, சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அபுதாபி இளவரசர் சாலையோரம் சிறுமியுடன் அமர்ந்திருந்த காட்சியினைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி சென்றனர்.Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl