ஐதராபாத், பிப். 21-
ஆந்திரா தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக உள்துறை செயலாளர் தெரிவித்தார். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து வருகின்றனர். அப்போது வெடிக்காத ஒரு குண்டை போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தையடுத்து ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்திற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பையடுத்து அருகில் உள்ள நகரமான சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக உள்துறை செயலாளர் தெரிவித்தார். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து வருகின்றனர். அப்போது வெடிக்காத ஒரு குண்டை போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தையடுத்து ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்திற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பையடுத்து அருகில் உள்ள நகரமான சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.