சாலையில் நாம் அடிக்கடி காணும் காட்சி தான் மனநோய் பதிக்கக்ப்பட்டவர்கள் .தமிழ்நாடு எங்கும் இவர்களை பரவலாக காணலாம். அழுக்கு சட்டை ,கிழிந்த பெண்ட் ,பரட்டை தலை பெண்களாக இருந்தால் கிழிந்த சேலை, கிழிந்த பாவாடை ,ஜாக்கட் என்று அலக்கொலம் நீண்டுகொண்டே போகும். இவர்கள் ஒரு காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்த மக்களே ! மனநலம் பாதிப்பு என்பது ஒரு வகை நோய் .இவர்களின் உறரவினர்கள் அந்த நோய்க்கு மருத்துவம் செய்யாமல்,அல்லது முழுமையாக மருத்துவம் செய்யாமல் கை விட்டுதனால் அவர்கள் வீதிக்கு வந்து விடுகின்றனர்.பின்னர் இவர்களை யாரும் கவனிப்பது கிடையாது. சாலையில்தான் இவர்களின் தாக்குமிடம்.வெயில், மழை ,குளிர் ,வெள்ளம் என்று எதுக்கும் இவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பிச்சைகாரர்கள் கூட வீடுகளில் உணவு கேட்டு பெற்று கொள்வர்.ஆனால் இவர்களுக்கு பசி எடுத்தால் கேட்க மாட்டார்கள். பெரும்பாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான்.அல்லது குப்பை தொட்டிகளில் வீசப்படும் நாரிப்போன உணவு .குடும்பத்தினாரால் கை விடப்படும் இவர்கள் இறக்கும் வரை இதே நிலைதான் !மனிதாபமுள்ள சிலர் அமைப்புகள் மூலமாக இவர்களுக்கு உதவினாலும் அது யானைக்கு சோலப் பொறி கதைதான். இவர்கள் மறுவாழ்வு பெறவேண்டுமானால் அரசாங்கம் மனநோய் மருத்துவமனைகளை அதிகப்படுத்த வேண்டும்.மறுவாழ்வு திட்டம் ஏற்படுத்த வேண்டும்.ஆட்சியாளர்கள் இதை செய்வார்களா? -ஆக்கம் -இ .அப்துல் ஹமீது ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'..அல் குரான் 5:32