ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'காவி '
தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பாபிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது. 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின்
வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு
நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர்.அதன் பின்னர் இந்த குண்டுவெடிப்பு
சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது அது போலவே
முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்து.மெக்கா
மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பில் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தேசியப்
புலனாய்வு முகாமையகம் காவி தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு
வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது. தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள்
என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. இருப்பினும் இந்த சம்பவத்திலும் காவி
தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்குஏற்றுக்
கொள்ளாக்கப்பட்டிருக்கிறது.விசாரணை சரியான கோணத்தில் நடந்தால் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.