தீவிரவாத குற்றசாட்டுகளுக்கு ஆளான இசுலாமிய இளைஞர்களை நீதிமன்றங்களே நிரபராதிகள் என தீர்ப்பளித்த பின்னரும்,ஹிந்துத்துவ பயங்கரவாத தலைவர்களின் சுய வாக்குமூலம் கொடுத்த பின்னரும் அதனை உறுதிபடுத்துவது போல் அதன் பின் தொடர்ந்த விசாரனைகளில் இந்துத்துவா சக்தியினரின் பயங்கரவாத சம்பவங்களின் பங்கு வெளிப்பட்ட பின்னரும்
எதற்காக இசுலாமியர்களை நோக்கியே உங்களின் விசாரனையை முன்னெடுக்குறீர்கள்?
ஹிந்துத்துவ பயங்கரவாத தலைவர்களின் சுய வாக்குமூலமும் அதனை உறுதிபடுத்துகின்ற தெளிவுகள் இருந்தும் இசுலாமியர்கள் அல்லாத ஒருவரின் பெயர் கூட தாங்கள் வெளியிட்ட கண்ணுக்கு தெரியாத பயங்கரவாதிகளின் பட்டியலில் இல்லையே ஏன்?
விசாரனை அதிகாரிகளும்,ஊடகங்களும் இசுலாமிய சமூகத்தின் மேல் பயங்கரவாத குற்றம் சுமத்தி குதுகூலிக்கிறதே இவர்களுக்கு எங்கிருந்து இது போன்ற விபரங்கள் கிடைக்கின்றன்?இவர்களை இயக்குவது யார்?
சம்ஜோடா எக்ஸ்பிரஸ்,அஜ்மீர் தர்கா,மாலேகான்,ஹைதரபாத் துடங்கிய முன் கால பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னில் சங் பரிவார் அமைப்புகளுக்கு உள்ள தொடர்பை NIA தன் விசாரனையில் குற்றமற்ற முறையில் நிறுபித்து இருக்கும் வேளையில்,என்ன காரணத்தினால் இந்த சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்களையோ,இவ்வழக்கில் பிரதி சேர்க்கப்பட்டவரையோ விசாரணைக்கு உட்படுத்தவில்லை?அல்லது இசுலாமியர்கள் மாத்திரமே இதன் பின்னனியில் உள்ளனர் வேறு யாரையும் சந்தேகிக்க தேவையில்லை என்ற தீருமாணத்தில் உறுதியாக உள்ளீர்களா?அப்படியென்றால் நடந்து கொண்டு இருக்கும் விசாரனை முன்னெடுப்புகளை எதன் அடிப்படையில் நம்புவது?