உலக முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய "ஷரீஅத்" ஆட்சி முறையையே விரும்புகின்றனர் : அமெரிக்க சர்வே முடிவு!

மக்களின் வாழ்க்கையில் மதங்களின் தாக்கம் குறித்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் "Pew Forum on Religion & Public Life" என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர்,
இஸ்லாமிய ஷரீஅத் சட்ட முறைப்படியான ஆட்சியை விரும்புகின்றனர், என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருந்து செயல்படும் இந்த "Pew Forum" அமைப்பு, உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களிடம் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கருத்துக்களை கேட்டு எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.

(இந்த சர்வே முடிவுகள், ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய விரோத விஷமம் கலந்து இருக்கும், என்ற முன்ஜாக்கிரதை உணர்வோடு இதை எடுத்துக்கொள்வதே சரியாக இருக்கும் - ஜாகிர் ஹுசைன்)

http://www.pewforum.org/Topics/Religious-Affiliation/Muslim/

ஆசிய கண்டத்தில் வசிக்கும் நான்கில் 3 பகுதி முஸ்லிம்கள், விவாகரத்து போன்ற குடும்ப உறவுகள் விஷயங்களிலும், குடும்ப சொத்துக்களின் வாரிசுரிமை போன்ற சட்டத்திலும், இஸ்லாமிய ஷரீஅத் முறைப்படியான தீர்வுகளை விரும்புகின்றனர்.

திருடுபவர் கையை வெட்டுவது, மரண தண்டனை உள்ளிட்ட சிலவற்றை, கிழக்காசிய முஸ்லிம்களில் சிலர் விரும்பவில்லை எனவும், இதனால் முஸ்லிமல்லாத நாடுகள் மத்தியில், இஸ்லாம் தள்ளி நிற்பதாக கூறுகின்றனர்.

அதே நேரம், இந்த சட்டங்களை முஸ்லிமல்லாத நாடுகளிலும் அமல்படுத்தினால், குற்றங்கள் குறையும் என ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.

இது விஷயத்தில் எல்லோரது கருத்தும் ஒன்றாக இல்லை, இது போன்ற தண்டனை சட்டங்களை முஸ்லிமல்லாதார் மீது செயல்படுத்தக் கூடாது, என்று வங்கதேசத்தில் 97% மக்களும், பாகிஸ்தானில் 96% பேரும், எகிப்தில் 77% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதல் உள்ளிட்ட போர் முறைகளை அனைத்து முஸ்லிம்களும் ஒரே குரலில் எதிர்ப்பதாக கூறும் சர்வே, அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை எதிர்கொள்ள வேறு வழியில்லை என, பாலஸ்தீனத்தில் 40% மக்களும், ஆப்கானில் உள்ள 39% மக்களும், எகிப்தின் 29% மக்களும், இதை ஆதரிக்கின்றனர்.

எனினும், ஒட்டுமொத்தமாக 80% இஸ்லாமியர்கள் இதை சட்ட விரோதம் என்கின்றனர்.


இஸ்லாமிய ஆட்சி முறையை ஏற்பதில் ஒத்தக் கருத்தை வெளியிட்டுள்ள முஸ்லிம்கள், அதில் ஜனநாயக நடைமுறை பின்பற்றவும் வலியுறுத்துகின்றனர்.

54% ஈராக் மக்களும், 81% லெபனான் மக்களும், 70% வங்கதேசத்தவரும், ஜனநாயக ஆட்சி முறையை விரும்புகின்றனர்.

கணவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதை, குறைந்த பட்சமாக 76% லெபனான் பெண்களும், அதிகபட்சமாக இந்தோனேஷியாவில் 96% பெண்களும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Back to Home Back to Top tntjmvl