திருச்சி மாணவி தவ்பீக் சுல்தானா (13) விஷயத்தில் மீடியாக்கள் மவுனம்!

டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு புதிய தலைமுறை போன்ற மீடியாக்கள் தினமும் எதையாவது கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்றோ திருச்சி மாணவி முஸ்லிமாக இருப்பதால் வாய்மூடி மவுனம் காக்கின்றன. (செய்தி வாசிப்போடு நிறுத்திக்கொள்கின்றன.)


 தவ்பீக் தவ்ஹீத் சுல்தானா (13) என்ற சிறுமியின் உடல் சில தினங்களுக்கு முன் ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி பிணமாக கண்டெடுக்கப்பட்டது...

கொலை செய்யபட்டவர் கற்பழிக்கபட்டார் என்பதை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தகூடிய சில உடல் உறுப்புகளை காணவில்லை,

காவல்துறை இவ்வழக்கை தற்கொலையாக மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.



*டெல்லியில் நடந்த பெண்ணின் கற்பழிப்புக்கு ஆர்பாட்டம் நடத்திய பல அரசியல் கூட்டங்கள் இப்போ எங்கே?

*உண்ணா விரதம் இருந்த சமுக ஆர்வலர்கள் இப்போ எங்கே ?

*கேமரா முன், பெண் உரிமையை பற்றி பேசிய மாதர் சங்கங்கள் இப்போ எங்கே?

*அப்பொழுது குரல் எழுப்பிய பல செய்தி சேனல்கள் இப்போ எங்கே?

*நாள்தோறும் தலைப்பு செய்தியாக போட்ட நாளிதழ்கள் இப்போ எங்கே?

இதற்கெல்லாம் ஒரே விடை என்ன தெரியுமா ...

பாதிக்கப்பட்டு இறந்த இப்பெண் முஸ்லிம் பெண் என்பதால் மட்டுமே. இல்லையென்றால் மேலே சொன்ன அனைவரும் களம் இறங்கி இருப்பார்கள்.

Back to Home Back to Top tntjmvl