பிச்சை எடுக்கும் அவலம்!மறுவாழ்வு திட்டம் கொண்டு வருமா அரசு?














தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் பிச்சை எடுக்கும் தொழிலால் பொதுமக்கள் பெரும் அவதிக்கும்,குற்ற உணர் விற்கும் தள்ளப்படுகின்றார்கள்.சில பேர் வறுமையின் காரணமாக பிச்சை எடுக்கிறார்கள் .பலபேர் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்கின்றார்கள். பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் பொதுமக்களை அதிகம் சிரமப்படுதுகின்றனர்.இவர்களுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் பிச்சை எடுப்பதை நிறுத்த மாட்டார்கள். இதனால் உண்மையான ஏழைகள் பதிக்கப்படுகின்றனர்.தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஏழையா அல்லது தொழிலா என்று குழம்பி போய் யாருக்கும் தர்மம் செய்யாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்று விடுவர்.பின்னர் குற்ற உணர்விற்கு தள்ளப்படுகின்றார்கள்.அரசாங்கம்  மறுவாழ்வு திட்டங்கள் கொண்டு  வந்தால் தான் இதை ஒழிக்க முடியும். அரசாங்கம் இதை கவனிக்குமா?  -

இ.அப்துல் ஹமீது

Back to Home Back to Top tntjmvl