குஜராத் கலவரத்தை மறக்க முடியுமா?-நந்திதா தாஸ்

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர் மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப் பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனை களும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட் லர் ஒரு இசைப் பிரிய ராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந் தார். அக்காரணங்களுக் காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்ப தில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படு கிறார் என்று பத்திரிகை யாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
மேலும் பத்து வரு டங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அகமதாபாத் தையும் வதோதராவை யும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியையும் எடை போடக் கூடாது என் றும் பின் தங்கிய சவு ராஷ்டிரா பகுதிகளை யும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என் றும் கூறினார்.
கலவரத்தை மறக்க முடியுமா?
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ்  தங்கள் உடைமையையும் உறவு களையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.

Back to Home Back to Top tntjmvl