'மாத்யமம்’ ஒரு இஸ்லாமிய நடுநிலைப் பத்திரிக்கையின் வெற்றிப் பயணம்.


* 1991- இல் கோழிக்கோட்டில் துவக்கப்பட்ட ‘மாத்யமம்’ எனும் மலையாள நாளேடு கேரளாவில் ஏழு இடங்கள் உட்பட பெங்களூர், பஹ்ரைன்,கத்தார், துபை, குவைத் என 13 இடங்களிலிருந்து வெளிவருகிறது

* நூறாண்டுகளாக வெளிவரும் மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது மாத்யமம்.

* வாசகர்களில் 15 -20 விழக்காட்டினர் முஸ்லிம் அல்லாதவர்கள்.

* உண்மைச் செய்திகளை வெளியிடும் நம்பகமான நாளேடு என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

* சிறந்த தலையங்கத்திற்கான பரிசைப் பெற்றுள்ளது.

* தொடர்ந்து ஐந்து வருடங்களாக சிறந்த வடிவமைப் புக்கான (லே- அவுட்) விருதை பெற்றுள்ளது.

* ஆபாசம், மது, புகை, சினிமா, ஏமாற்று மற்றும் சந்தேகத்திற்குரிய தொழில்கள் பற்றிய விளம்பரங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

* சிறுபான்மையினர், தலித்துகள், சுற்றுப்புறச் சூழல், சமூகக் கொடுமைகள் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.

* மக்களை ஏமாற்றும் தொழில் நிறுவனங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. ( எ.கா. தேக்குமர விளம்பர திட்ட மோசடிகள்,கோகோலா நிறுவன மோசடிகள்)

* மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் அரசின் கொள்கைகளை உருவாக்குவதிலும் பங்களிப்பு செய்துள்ளது.

இந்த நாளிதழின் வருகைக்குப்பின் கேரளாவில் முஸ்லிம்கள் பற்றிய அவதூறான செய்திகள்,இஸ்லாம் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்படுவது பெருமளவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மாறாக, இஸ்லாம் பற்றிய சரியான கண்ணோட்டம் வளர்ந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

Back to Home Back to Top tntjmvl