நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்வோம் – முலாயம் சிங்!

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் பொய் வழக்குகளை சுமத்தி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று ஆளும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத வழக்குகள் சுமத்தப்பட்ட 3 இளைஞர்கள் நிரபராதிகள் என்று நிரூபணமானதால் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான வழக்குகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இதர 24 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முலாயம் சிங் தெரிவித்தார்.

உ.பி மாநிலம் லக்னோவில் சிறுபான்மையினர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார் அவர். உ.பியில் 11 முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். உளவுத்துறைக்கான பொறுப்பு சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவரான ஆஸம்கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் கேபினட் அமைச்சராக உள்ளார். தனது கட்சியின் ஆட்சியில் 400க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்துள்ளதாக கடந்த வாரம் முலாயம் சிங் கூறியிருந்தார். சிறையில் வாடும் அனைத்து முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வோம் என்று சமாஜ்வாதிக் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

-தூது ஆன்லைன்

Back to Home Back to Top tntjmvl