உங்கள் உறவினர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்களா ?

ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் , " இறைத்தூதர் அவர்களே ! எனக்கு சில உறவினர் உண்டு அவர்களை நான் இணைந்து வாழ்கிறேன். ஆனால் அவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்.அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு தீமை செய்கிறார்கள் . அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை
கண்டுகொள்வதில்லை "என்று கூறினார்.

நீர் கூறுவது போல் நீர் இருந்தால் அவர்களை நீர் சுடுசாம்பலை உண்ண செய்தது போலாகும் .  நீர் இதே நிலையில் இருக்கும் வரை
அல்லாஹ்விடமிருந்து உதவியாளர் ஒருவர்  உம்முடன் இருப்பார் " என்று நபி ( ஸல் ) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2558

Back to Home Back to Top tntjmvl